கொடைக்கானலில் விபத்துக்கு காரணமாக இருந்த தடுப்புச் சுவர் அகற்றம்

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தடுப்புச் சுவர், புதிய தலைமுறை செய்தி் எதிரொலியால் அகற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பாதையில், பெருமாள்மலை அடிவாரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியின்போது ஒரு தடுப்புச் சுவர் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதனால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக புதியதலைமுறையில் செய்தி வெளியானது. அதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் அந்தத் தடுப்புச் சுவரை அகற்றினர்.

கொடைக்கானல் அருகே பாச்சலூரில் சிறுமி சடலமாக மீட்பு-சாலை மறியலில் ஈடுபட்டஉறவினர்கள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சலூரில் ஊராட்சி அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று மாலை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் பின்புறம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் நேற்று தாண்டிக்குடி ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியர் நேரடி விசாரணை செய்து மூன்று …

பழனியில் எஸ். எஸ்ஐயை வெட்டிய விவகாரம், ஒருவர் கைது

பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் என்பவரையும் அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடிய யுவராஜை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள பொன்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விபரீதத்தில் முடிந்த ரெட்ராக் செல்ஃபி.. 500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் மாயம் – கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கான‌ல் வ‌ட்டக்கான‌ல் அருகே வனத்துறையினரால் தடை செய்ய‌ப்ப‌ட்ட‌ ரெட்ராக் ப‌குதியில் செல்பி எடுக்க‌ முய‌ன்ற‌ ம‌துரையை சேர்ந்த‌ இளைஞர் மாய‌ம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர், இதனையடுத்து இன்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த இளைஞர் குழுவினர்  வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலைமுகடுகள் நிறைந்த பச்சை பசேல் என ரம்மியமாக …

அஞ்சல் நிலைய கணக்குடன் பான் இணைப்பு அவசியம்

அஞ்சல் நிலைய பரிவர்த் தனையில் செய்யப்படும் முறைகேடுகளைஅஞ்சல் நிலைய பரிவர்த் தனையில் செய்யப்படும் முறைகேடுகளை தடுக்க வாடிக்கையாளர்கள் புதிதாக கணக்கு தொடங்கும் போது  செல்போன் எண்ணை இணைப்பது  அவசியம் என அஞ்சல் துறை வலியுறுத்தியுள்ளது. கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாடிக்கையாளரின் பான்கார்டு எண்ணை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட கணக்கில் செயல்பாடுகள் பான்கார்டு எண் சமர்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படும். ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு செல் போன் எண்ணையும், …

திண்டுக்கல் பள்ளிகளின் தேவை குறித்து பட்ஜெட்: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில்

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-23 ம் கல்வியாண்டின் தேவைகளுக்கான பட்ஜெட் கணக்கிடும் பணி மும்முரமாக நடக்கிறது.மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்கள் ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய துவங்கப்பட்டது. தற்போது இவ்விரு திட்டங்களும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த கல்வி திட்டமாக செயல்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2022-23 ம் கல்வியாண்டின் தேவைகளுக்கான பட்ஜெட் கணக்கிடும் பணியில் திட்ட அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறை கட்டடம், …

கொடைக்கானலில் பார்க்கிங் இல்லாத விடுதிகளால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் அண்ணா சாலையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நகரின் மையப்பகுதியாக உள்ள அண்ணா சாலையில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பத்திரப்பதிவு, தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கூட்டுறவு அங்காடி என பல முக்கிய அலுவலகங்கள் உள்ளன.தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் வாகனங்களை ரோட்டோரம் பார்க்கிங் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது. இங்கு பார்க்கிங் வசதியற்ற விடுதிகள் பல உள்ளன. இதனால் நெரிசல் அதிகமாகி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.பல ஆண்டுகளாக தொடரும் இதனை …

கொடைக்கானலில் கழிவுநீரால் சுகாதார கேடு

கொடைக்கானல் டோபிகானல் பெரியகாளியம்மன் கோவில் வளாகத்திற்குள் கழிவு நீர் கடந்த 1 மாத காலமாக ஆறு போல் ஓடுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இவற்றை அகற்ற அதிகாரியிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்ஒரு மாத காலமாக அலட்சியமாக செயல்படும் அரசை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட உள்ளோம், என்றனர்.

திண்டுக்கல் ஒரு தினுசுதான்.. வ.உ.சி., வேலுநாச்சியார் வேடத்துடன் வந்தால் 2 சிக்கன் பிரியாணி இலவசம்

திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வேலுநாச்சியார் வேடமணிந்து வரும் குழந்தைகளுக்கு 2 சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று ஹோட்டல் முஜிப் பிரியாணி அறிவித்திருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இத்தனைக்கும் வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி. பாரதியார் என தேச விடுதலைக்காகப் போராடி மாண்ட மான மறவர்களின் திருவுருவங்களே அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் வ.உ.சியை தெரியாது, வேலுநாச்சியாரை தெரியாது என கூறி திமிராக தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை …