திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வேலுநாச்சியார் வேடமணிந்து வரும் குழந்தைகளுக்கு 2 சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று ஹோட்டல் முஜிப் பிரியாணி அறிவித்திருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இத்தனைக்கும் வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி. பாரதியார் என தேச விடுதலைக்காகப் போராடி மாண்ட மான மறவர்களின் திருவுருவங்களே அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் வ.உ.சியை தெரியாது, வேலுநாச்சியாரை தெரியாது என கூறி திமிராக தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் தந்தை பெரியார், திருப்பூர் குமரன், காமராஜர் என எண்ணற்ற தலைவர்கள் உருவங்களுடன் அலங்கார ஊர்திகள் இன்று சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன.

About Author