அஞ்சல் நிலைய பரிவர்த் தனையில் செய்யப்படும் முறைகேடுகளைஅஞ்சல் நிலைய பரிவர்த் தனையில் செய்யப்படும் முறைகேடுகளை தடுக்க வாடிக்கையாளர்கள் புதிதாக கணக்கு தொடங்கும் போது  செல்போன் எண்ணை இணைப்பது  அவசியம் என அஞ்சல் துறை வலியுறுத்தியுள்ளது.

கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாடிக்கையாளரின் பான்கார்டு எண்ணை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட கணக்கில் செயல்பாடுகள் பான்கார்டு எண் சமர்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படும்.

ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு செல் போன் எண்ணையும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான பரிவர்த் தனைகளுக்கு பான் கார்டு எண்ணையும் தபால் நிலையங்கள் சரிபார்க்க வேண்டும்.

செயல்பாட்டில் உள்ள அனைத்து கணக்குடன் செல்போன் எண், பான்கார்டு எண் இணைக்கப்பட்டுள்ளதை தபால் நிலையங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *