கொடைக்கானல் அண்ணா சாலையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நகரின் மையப்பகுதியாக உள்ள அண்ணா சாலையில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பத்திரப்பதிவு, தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கூட்டுறவு அங்காடி என பல முக்கிய அலுவலகங்கள் உள்ளன.தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் வாகனங்களை ரோட்டோரம் பார்க்கிங் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது.

இங்கு பார்க்கிங் வசதியற்ற விடுதிகள் பல உள்ளன. இதனால் நெரிசல் அதிகமாகி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.பல ஆண்டுகளாக தொடரும் இதனை அதிகாரிகளும் ஏனோ கண்டுகொள்வதில்லை. போக்குவரத்து போலீசாரும் விடுதிகளிடம் கண்டிப்பு காட்டத் தயங்குகின்றனர். தனியார் உணவகத்தின் கவனிப்போ இது போன்ற அசாதாரண நிலை உருவாக காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு தீர்வு காண போலீஸ் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *