பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16-ந் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஜனவரி 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 18-ந் தேதியன்று தைப்பூசம் என்பதால் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள் என்கிற குழப்பம் இருந்தது. இந்த …

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்புடன் வந்த வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் வயலூரில் வடமாநிலத் தைச் சேர்ந்த அவினேஷ் (வயது 19) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று அவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனையடுத்து தன்னை கடித்த பாம்புடன் அவினேஷ் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.